இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காதலுக்கு எதிர்ப்பு: கும்பகோணம் அருகே காதலர்கள் தற்கொலை 

கும்பகோணம் அருகே காதலர்கள் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

News image
அழகர்-பவித்ரா
Updated On :27 ஜனவரி 2021, 7:33 am

DIN


கும்பகோணம்: கும்பகோணம் அருகே காதலர்கள் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

கும்பகோணம் அருகே பொன்பேத்தி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி மகள் பவித்ரா (26). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமால் மகன் அழகரும் (33) காதலித்து வந்தனர்.

இக்காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால் இருவரும் ஓராண்டுக்கு முன்பு ஊரை விட்டு சென்று விட்டனர். 

இந்நிலையில், கும்பகோணம் அருகே கல்லூர் கிராமத்தில் இருவரும் மரத்தில் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை காலை இறந்து கிடந்தனர்.

தகவலறிந்த சுவாமிமலை காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது உடலையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.