முகாமில், எம்.ஜி.எம் மருத்துவமனை இருதய சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பிரதீப், விவேகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஆர்.சிவராமன் உரிய ஏற்பாட்டினை செய்திருந்தனர். முகாமில் 200 பேர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஈசிஜி, எக்கோ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்கள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் முகாமின் முடிவில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.