கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் கானித் செய்யது அகமது, மைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் நாராயணன் ,சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.