தமிழகத்தில் மேலும் 4,230 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,230 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 4,230 பேருக்கு கரோனா
Published on
Updated on
1 min read


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,230 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 24,88,407ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 486, ஈரோட்டில் 395, சேலம் 268, திருப்பூர் 243, சென்னை 238 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 97 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 32,818 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 4,952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,18,882 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 36,707 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் 1,59,159 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com