ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து 

ஊத்துக்கோட்டையை அடுத்து அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோவியிலில் நாளை செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
சிறுவாபுரி முருகன் கோவில்
Updated On :5 ஜூலை 2021, 12:48 pm

DIN

ஊத்துக்கோட்டையை அடுத்து அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோவியிலில் நாளை செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

செவ்வாய்க்கிழமையில் ஆறு வாரங்கள் வந்து விளக்கேற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் செவ்வாய்கிழமைகளில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே, செவ்வாய்க்கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காணப்படுவதும் வழக்கம்.

தற்போது கரோனா பெரும் தொற்றால் ஊரடங்கு உள்ள நிலையிலும் நோய் பரவலை கட்டுப்படுத்தவும் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும் செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.