இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.59 அடியிலிருந்து 78.31 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 663 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை 674 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 40.29 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஒகேனக்கலில் நீர்வரத்து 2,000 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையளவு 2.40 மி.மீ. ஆகப் பதிவாகியுள்ளது.