கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உசிலம்பட்டி அருகே கொள்முதல் மையத்தில் நெல் மூட்டைகள் திருட்டு

உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் மையத்தில் மர்மநபர்கள் நெல் மூட்டைகளைத் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

News image

உசிலம்பட்டி அருகே கொள்முதல் மையத்தில் நெல் மூட்டைகள் திருட்டு

Updated On :6 ஜூலை 2021, 4:51 am

DIN

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் மையத்தில் மர்மநபர்கள் நெல் மூட்டைகளைத் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நெல் மூட்டைகளை ஷேர் ஆட்டோவில் கடத்தி செல்லுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி கிராமத்தில் அரசு சார்பில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிந்துபட்டி,  அருகே உள்ள  பல்வேறு கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள்  நெல்கதிர்களை அறுவடை செய்து நெல் மூட்டைகளை அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் அரசு நெல் கொள்முதல் மையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை சிலர் திருட்டுத்தனமாக ஷேர் ஆட்டோவில் கடத்தி செல்வதாக தகவல் தெரிய வந்துள்ளது. ஷேர் ஆட்டோவில் நெல் மூட்டைகளை கடத்திய போது அங்கிருந்த யாரோ ஒருவர்  போனில் அதனை வீடியோவாக பதிவு செய்து  சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ உசிலம்பட்டி பகுதியில் வேகமாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.