டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செங்கல்பட்டு: பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து காங். போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் மாட்டுவண்டி சைக்கிள் பேரணியுடன் செங்கல்பட்டு காங்கிரஸ் கட்சியினர் கண்டன  ஆர்ப்பாட்டம்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:37 am

DIN

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து செங்கல்பட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கட்கிழமை மாலை 
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் நூதன முறையில் மாட்டுவண்டி மற்றும் சைக்கிள் பேரணியுடன்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று கருப்பு வேளாண் சட்டம் என மக்களை துயரத்தில் தள்ளிக் கொண்டிருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து   மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து மக்களின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல் டீசல் விலை குறைக்க மத்திய அரசை கண்டித்து கண்டன நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சைக்கிள் பேரணி மற்றும் மாட்டு வண்டி ஒட்டியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர். சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். செங்கல்பட்டு நகர தலைவர் ஜே.பாஸ்கர் வரவேற்று பேசினார்.

டி.ஜெயராமன், ஆர் .குமரவேல், ரியாஸ் பாய் ,ஏ.ஜி. பார்த்தசாரதி,  ஜெயராமன், பாண்டியன், உமாபதி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பால விக்னேஷ், வின்சென்ட்   உள்ளிட்டோர் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.