விராலிமலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் தங்கராஜ். இவர் பண பரிவர்த்தனை தொடர்பாக விராலிமலையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணம் செலுத்துவதற்காக மஞ்சள் பையில் வைத்து 3 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்து சென்றுள்ளார். இதில் 25 எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுகள் ரூ.50 ஆயிரம் மஞ்சள் பைக்குள் இருந்து தவறி வங்கியில் விழுந்துள்ளது. இதை கவனிக்காத தங்கராஜ் வங்கி கவுண்டரில் பணத்தை செலுத்த முற்பட்டபோது தான் பணம் ரூ.50,000 தொலைந்தது தெரியவந்தது. உடனடியாக கடையிலேயே பணத்தை வைத்து விட்டோமோ என்று பதறிக்கொண்டு கடைக்கு வந்து பார்த்தபோது கடையிலும் பணம் இல்லை.