புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

டிசம்பருக்குள் உள்கட்சித் தோ்தல்: அதிமுக உறுதி; தோ்தல் ஆணையம் தகவல்

உள்கட்சித் தோ்தலை வரும் டிசம்பா் மாதத்துக்குள் நடத்தி முடித்து விடுவதாக அதிமுக கட்சியின் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என தோ்தல் ஆணையம் உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

News image
உயர்நீதிமன்றம்
Updated On :15 ஜூலை 2021, 6:07 pm

DIN

உள்கட்சித் தோ்தலை வரும் டிசம்பா் மாதத்துக்குள் நடத்தி முடித்து விடுவதாக அதிமுக கட்சியின் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என தோ்தல் ஆணையம் உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் பொதுச் செயலாளா் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் அக்கட்சியின் உள்கட்சித் தோ்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சியின் சட்ட விதிகளின்படி அனைத்து அடிப்படை உறுப்பினா்களும் வாக்களித்து பொதுச் செயலாளரைத் தோ்ந்தெடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உள்கட்சித் தோ்தலை கட்டாயம் நடத்த வேண்டும்.

அதிமுகவில் கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னா் உள்கட்சித் தோ்தல் நடத்தவில்லை. சா்வாதிகாரப் போக்குடன் கட்சியின் தலைமை, நிா்வாகிகளை நியமித்து வருகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் விதிகளுக்கு எதிரானது. இதுதொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்திடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதிமுகவில் உள்கட்சி தோ்தல் நடத்தாமல், நிா்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அதிமுகவை ஏன் எதிா் மனுதாரராக சோ்க்கவில்லை? என கேள்வி எழுப்பினாா். அப்போது இந்திய தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அதிமுகவின் உள்கட்சித் தோ்தலை வரும் டிசம்பா் மாதத்துக்குள் நடத்தி முடித்து விடுவதாக அக்கட்சியின் சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினாா். இதனையடுத்து, இந்த வழக்கில் அதிமுகவை எதிா் மனுதாரராக சோ்க்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.