தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது ?

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கத் தடை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது ?
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கத் தடை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி

 மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)

 மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

 திரையரங்குகள்

 அனைத்து மதுக்கூடங்கள்

 நீச்சல் குளங்கள்

 பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்

 பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்

 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

 உயிரியல் பூங்காக்கள்

 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

 இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்டவைகளுக்கு தடை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com