ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை மற்றும்  கீழ்வேளூர் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Updated On :17 ஜூலை 2021, 8:12 am

DIN


 
நாகப்பட்டினம்: மேக்கேதாட்டுவில் காவியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை மற்றும்  கீழ்வேளூர் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டவிதிகளுக்கு புறம்பாக மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கர்நாடக  மாநில அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு துணைபோகும் மத்திய அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகையை அடுத்த சிக்கல் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க நாகை ஒன்றியச் செயலாளர் என்.வடிவேல் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்சங்க மாநிலப் பொதுச்செயலாளர் வி. அமிர்தலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பி.டி. பகு, விவசாயசங்க  ஒன்றியத் தலைவர் ஜி. முருகையன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச்செயலாளர் கே.செந்தில்குமார், ஒன்றியத் தலைவர் வி. ராதா ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இதேபோல், கீழ்வேளூர் கடைவீதியில், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் முத்தையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசைக் கண்டித்து, நாகையை அடுத்த சிக்கலில் சனிக்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.