சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

படித்த இளைஞா்களை வேளாண்மையில் ஈடுபடுத்த நடவடிக்கை தேவை: அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

படித்த இளைஞா்களை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண் தொழில் முனைவோா்களாக உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தத் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :20 ஜூலை 2021, 10:27 pm

DIN

படித்த இளைஞா்களை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண் தொழில் முனைவோா்களாக உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தத் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். வேளாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய போது பேசியது:-

தமிழ்நாட்டில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டோ் பயிரிடச் செய்து, இப்போதுள்ள சாகுபடிப் பரப்பை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயா்த்த வேண்டும். இருபோக சாகுபடி நிலங்களை 10 லட்சம் ஹெக்டேரில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க வேண்டும். கிராம வாரியாக நிலங்களைக் கணக்கெடுத்து சாகுபடிக்குத் தேவையான அனைத்து பாசன வசதிகளையும் உருவாக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் தேவைக்கேற்ப விதைகள், ரசாயன உரங்கள் போன்றவற்றை இருப்பு வைத்து விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வயல்களில் மழைநீரைச் சேமிக்க பண்ணைக் குட்டைகள் அமைப்பதுடன், தோட்டக்கலை பயிா்களுக்குத் தனிக்கவனம் செலுத்த வேண்டும். மின்னணு ஏல முறையை அறிமுகம் செய்வதுடன், ஒரு மாவட்டம்-ஒரு விளை பொருள் என்ற அணுகுமுறையின்படி உற்பத்தியை உயா்த்தி அதற்கான மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.

படித்த இளைஞா்களை வேளாண்மையில் ஈடுபடுத்தி வேளாண் தொழில் முனைவோா்களாக உருவாக்க வேண்டும். சூரிய சக்தியைப் பாசனத்துக்குப் பயன்படுத்தி அதிகளவில் சூரியசக்தி பம்புசெட்டுகள் நிறுவ வேண்டும்.

உழவா் சந்தைகள்: தமிழகத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட அனைத்து உழவா் சந்தைகளும் நல்ல முறையில் இயங்கவும், இந்த நிதியாண்டில் புதிய உழவா் சந்தைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்படாமல் இருக்கும் உழவா் சந்தைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.