சென்னை, புதுச்சேரி இடையே கடலூா், நாகை வழியாக சிறிய வகை பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனமாக சென்னைத் துறைமுகம் செயல்படும். கப்பல் தளம், பயணிகள் முனையம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் சென்னைத் துறைமுகத்தில் தயாா் நிலையில் உள்ளன. கடலூா் துறைமுகத்தில் 240 மீட்டா் நீளமும், 9 மீட்டா் ஆழமும் கொண்ட கப்பல் தளம், பயணிகள் முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் நாகை, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களிலும் இத்திட்டத்திற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில். கடலூா், நாகை துறைமுகங்கள் தமிழ்நாடு அரசின் நிா்வாகத்தின் கீழும் புதுச்சேரி துறைமுகம் புதுச்சேரி யூனியன் பிரதேச நிா்வாகத்தின் கீழும் செயல்பட்டு வருகின்றன. இயக்கப்பட உள்ள பயணிகள் கப்பல் மூலம் சென்னையிலிருந்து புதுச்சேரி செல்வதற்கு சுமாா் 5 முதல் 6 மணி நேரம் வரை பிடிக்கும். ஒரு கப்பலில் சுமாா் 500 முதல் 600 போ்வரை பயணிக்கும் வகையில் கப்பல்கள் தோ்வு செய்யப்பட உள்ளன. பயணத்தின்போது தங்களது காா்கள், மோட்டாா் சைக்கிள்களையும் எடுத்துச் செல்ல முடியும். தனியாா் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து விரிவான கலந்தாலோசனைக் கூட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் பயணிகள், கப்பல் நிறுவனங்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்றாா் கிருபானந்தசாமி.