காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் வட்டாட்சியர் பலி

கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஊத்துக்குளி பெண் வட்டாட்சியர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

News image

கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றுக்கு உயிரிழந்த ஊத்துக்குளி வட்டாட்சியர் கா.கலாவதி

Updated On :21 ஜூலை 2021, 4:11 am

DIN


திருப்பூர்: கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஊத்துக்குளி பெண் வட்டாட்சியர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்தவர் கா.கலாவதி(50), இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

இதனிடையே, கடந்த ஒரு வாரத்துக்கும் முன்பாக கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிக்குறிகள் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, திருப்பூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். 

திருப்பூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.