மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கம்பம் கூடலூர் பகுதிகளில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர்,  ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

News image
கம்பம் கூடலூர் பகுதிகளில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்
Updated On :21 ஜூலை 2021, 7:41 am

DIN


கம்பம்:  தேனி மாவட்டம் கம்பம், கூடலூர்,  ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் வாவேர்பள்ளி, மஸ்ஜிதே இலாஹி, மைதீன் ஆண்டவர் பள்ளி, அஸிசி பள்ளி, டவுன் பள்ளி, ஹெளதியா ஆகிய பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய பொதுமக்கள் ஈடுபட்டனர்.

கரோனா தொற்று பரவல் என்பதால் ஈத்கா மைதானத்தில் கூட்டுத்தொழுகை நடத்த அனுமதியில்லாதலால், சமூக இடைவெளியை கடைபிடித்தும், சானிடைசர் பயன்படுத்தியும் தனித்தனி  குழுக்களாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர், தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

கூடலூரில் உள்ள மைதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் ஜமாத் கமிட்டியினர் தனித்தனியாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதே போல் காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.