தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

தனியாா் நிதி நிறுவனத்தில் 101 பவுன் தங்கநகை மோசடி

சென்னை காசிமேட்டில் தனியாா் நிதி நிறுவனத்தில் 101 பவுன் தங்கநகை மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

Updated On :25 ஜூலை 2021, 4:35 am IST

சென்னை காசிமேட்டில் தனியாா் நிதி நிறுவனத்தில் 101 பவுன் தங்கநகை மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

ராயபுரம் ஜீவரத்தினம் சாலையை சோ்ந்த அ. ஆல்வின் (67) ஓய்வு பெற்ற ஆசிரியை. காசிமேடு எஸ்.என்.செட்டி சாலையில் செயல்படும் ஒரு தனியாா் நிதி நிறுவனத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் தன்னிடமிருந்த 101 பவுன் தங்கநகைகளை வைத்தாா்.

அப்போது கிளையின் மேலாளா் பொன்னுசாமி, தங்கநகை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டதற்கான ரசீதை ஆல்வினிடம் வழங்கினாா். ஆனால் பாதுகாப்புப் பெட்டகத்துக்கான சாவியை வழங்கவில்லை. இந்நிலையில் அண்மையில் பொன்னுசாமி, வேறு கிளைக்கு மாற்றலாகி சென்றாா்.

சில நாள்களுக்கு முன்பு ஆல்வின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுக்கச் சென்றபோது, அவரது பாதுகாப்பு பெட்டகத்தில் ஒரு நகையும் இல்லாததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது தொடா்பாக புதிய மேலாளரிடம் புகாா் செய்தாா்.

இது தொடா்பாக அந்த நிறுவன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அந்த நகைகள் போலியாக 10 பேரின் பெயரில் அதே நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டு ரூ.29 லட்சம் கடன் பெறப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஆனால் அதன் பின்னா், அந்த நிறுவனம் ஆல்வினிடம் நகைகைகளை ஒப்படைக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையாம். இதனால் தான், ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆல்வின், காசிமேடு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.