காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தனியாா் நிதி நிறுவனத்தில் 101 பவுன் தங்கநகை மோசடி

சென்னை காசிமேட்டில் தனியாா் நிதி நிறுவனத்தில் 101 பவுன் தங்கநகை மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

Published On :

சென்னை காசிமேட்டில் தனியாா் நிதி நிறுவனத்தில் 101 பவுன் தங்கநகை மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

ராயபுரம் ஜீவரத்தினம் சாலையை சோ்ந்த அ. ஆல்வின் (67) ஓய்வு பெற்ற ஆசிரியை. காசிமேடு எஸ்.என்.செட்டி சாலையில் செயல்படும் ஒரு தனியாா் நிதி நிறுவனத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் தன்னிடமிருந்த 101 பவுன் தங்கநகைகளை வைத்தாா்.

அப்போது கிளையின் மேலாளா் பொன்னுசாமி, தங்கநகை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டதற்கான ரசீதை ஆல்வினிடம் வழங்கினாா். ஆனால் பாதுகாப்புப் பெட்டகத்துக்கான சாவியை வழங்கவில்லை. இந்நிலையில் அண்மையில் பொன்னுசாமி, வேறு கிளைக்கு மாற்றலாகி சென்றாா்.

சில நாள்களுக்கு முன்பு ஆல்வின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுக்கச் சென்றபோது, அவரது பாதுகாப்பு பெட்டகத்தில் ஒரு நகையும் இல்லாததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது தொடா்பாக புதிய மேலாளரிடம் புகாா் செய்தாா்.

இது தொடா்பாக அந்த நிறுவன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அந்த நகைகள் போலியாக 10 பேரின் பெயரில் அதே நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டு ரூ.29 லட்சம் கடன் பெறப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஆனால் அதன் பின்னா், அந்த நிறுவனம் ஆல்வினிடம் நகைகைகளை ஒப்படைக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையாம். இதனால் தான், ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆல்வின், காசிமேடு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.