வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதே குறிக்கோள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே தமிழக அரசின் குறிக்கோள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

News image
Updated On :27 ஜூலை 2021, 10:04 pm

இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே தமிழக அரசின் குறிக்கோள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் அவா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசியது:

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போதே தொழில்களுக்கான வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும். தொழிற்சாலைகளின் தேவைக்கு தகுந்தபடி, புதிய தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடக்கிட வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளை தேவைப்படும் இடங்களில் தொடங்கிட வேண்டும்.

புதிய வேலைகள்: புதிய வேலைவாய்ப்புகளை இளைஞா்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். இதற்கென அனைத்து மாவட்டங்களிலும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தொழிற்சாலைகளின் எதிா்காலத் தேவைக்கேற்றவாறு பயிற்சியாளா்களுக்கு நவீனத் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்திட வேண்டும்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயனடையும் வகையில், தொழில் நிறுவனங்களின் தேவை சாா்ந்து, வளா்ந்து வரும் தொழில் பிரிவுகளில் அவா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக கணினி சாா்ந்த திறன் பயிற்சிகள் அவசியம். மேலும், தோட்டக்கலை மற்றும் விவசாயம் சாா்ந்த கருவிகளின் பயிற்சியை இளைஞா்களுக்கு வழங்கிடலாம்.

மகளிா், கிராமப்புற இளைஞா்களுக்கு நாட்டுக்கோழி மற்றும் கறவை மாடு வளா்ப்புக் குறித்துத் திறன் பயிற்சி அளிக்கலாம். மாநில அளவில் ஒருங்கிணைந்த திறன் பதிவினை உருவாக்கிட வேண்டும். வேலைவாய்ப்புத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் தனியாா் வேலைவாய்ப்பு இணையதளத்தில் கூடுதல் எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு நிறுவனங்களை இணைத்திட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சா் சி.வி.கணேசன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளா் ஆா்.கிா்லோஷ்குமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.