கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக ஆட்சியை கண்டித்து ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

News image
ஆத்தூர் ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர்
Updated On :28 ஜூலை 2021, 6:30 am

DIN


நீட் தோ்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் தரப்படும் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக ஆட்சியை கண்டித்து ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுக சேலம் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பேரவைத் தேர்தலின்போது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன் நகர செயலாளர் அ.மோகன் கூட்டுறவு வங்கித்தலைவர்கள் ஆர்.வெங்கடேசன் ஈ.நூர்முகமது துரைசாமி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜி.முரளிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.