ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வால்பாறையில் கரடி தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி படுகாயம்

வால்பாறையில் கரடி தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி படுகாயம் அடைந்தார். 

News image
Updated On :30 ஜூலை 2021, 4:16 pm

வால்பாறையில் கரடி தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

கோவை மாவட்டம்,  வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி இரண்டாம் டிவிஷனை சேர்ந்த ஆசிர்வாதம் மகன் வசந்த் பிரபாகர்(22). இவர் நேற்றிரவு 10.30 மணி அளவில் தேயிலை தோட்டத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த பகுதியில் குட்டியுடன் வந்த கரடி பிரபாகரை தாக்கியதோடு வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது.

இதனை கண்ட வசந்தின் நண்பர்கள் கரடியை கற்களைக்கொண்டு தாக்கியுள்ளனர். 

இதன்காரணமாக வசந்தை விடுவித்த கரடி வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த வசந்தை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கரடி தாக்கி இரண்டு நாள்களுக்கு முன் இளைஞர் ஒருவர் பலியான நிலையில், மேலும் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.