வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் பகுதி பழ வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் யு.சர்மிளா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், முத்தூர் கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதி விவசாயிகள் மா, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, சப்போட்டா, நாவல், தர்ப்பூசணி, பப்பாளி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடியை சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
பழ வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 2021 - 22 ஆம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பின்னேற்பு மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பழ வகைகளின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும், நல்ல விலை கிடைக்க தரம் பிரித்து உள் கவரில் போட்டு விற்கவும் ரூ.2 லட்சம் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.
விருப்பப்படும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் சான்று, புகைப்படங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், பழ வகைகள் சாகுபடி நில வரைபடம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


