ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சங்ககிரி: அறக்கட்டளை சார்பில் ஏழைகளுக்கு உணவு பொருள்கள் வழங்கல்

சங்ககிரி அருகே உள்ள கோணங்குட்டையூர் கிராமத்தில் இரு ஏழைகளுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி சிப்பம் மூட்டைகள், மளிகை சாமான்களை சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் நிர்வாகிகள் வழங்கினர். 

News image
சங்ககிரியை அடுத்த கோணங்குட்டையூர் கிராமத்தில்  உள்ள மாதேஸ்வரிக்கு அரிசி சிப்பம், மளிகை சமான்களை புதன்கிழமை வழங்கிய சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் நிர்வாகிகள். 
Updated On :2 ஜூன் 2021, 10:21 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள கோணங்குட்டையூர் கிராமத்தில் இரு ஏழைகளுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி சிப்பம் மூட்டைகள், மளிகை சாமான்களை சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் நிர்வாகிகள் புதன்கிழமை வழங்கினர். 

சங்ககிரியை அடுத்த கோணங்குட்டையூர் பகுதியைச் சேர்ந்த சின்னு (85), மாதேஸ்வரி (65) இருவரும் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முழு பொதுமுடக்கத்தையொட்டி சிரமத்தில் இருப்பதாக சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட்க்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனையடுத்து டிரஸ்ட் சார்பில் ரவி, விவேகானந்தன், கோபால், பாலகிருஷ்ணன், வெங்கடஸ்வரகுப்தா, முரளி, ஆனந்தகுமார் ஆகியோர்கள் இணைந்து இரு குடும்பத்திற்கும் தனித்தனியாக 25 கிலோ அரிசி சிப்பம் மூட்டை இரண்டு, மூன்று மாதங்களுக்கு தேவையான மளிகை சாமான்களை வழங்கினர். இந்த உணவு பொருள்களை சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார் தலைமையில் செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் எஸ்.கணேஷ், நிர்வாகிகள் ராமச்சந்திரன், கதிர்மதி ஆகியோர் இருவரின் இருப்பிடத்திற்கு சென்று வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.