சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதுவையில் கரோனாவுக்கு 18 போ் பலி; தொடர்ந்து குறையும் பாதிப்பு

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 712 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு மேலும் 18 போ் உயிரிழந்தனா்.

News image
புதுவையில் கரோனாவுக்கு 18 போ் பலி; தொடர்ந்து குறையும் பாதிப்பு
Updated On :4 ஜூன் 2021, 7:33 am

PTI

புதுச்சேரி: புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 712 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு மேலும் 18 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 9,458 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 530 பேருக்கும், காரைக்காலில் 121 பேருக்கும், ஏனாமில் 36 பேருக்கும், மாஹேவில் 25 பேருக்கும் என மொத்தம் 712 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,07,826-ஆக அதிகரித்தது.

கடந்த 24 மணி நேரத்தில்18 பேர் பலியாகினர். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,601-ஆக உயா்ந்தது. இந்த நிலையில், 1,215 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 1,368 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 8,126 பேரும் என மொத்தம் 9,494 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.