எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மேலும் 3 ஆக்சிஜன் ரயில்கள் தமிழகம் வந்தடைந்தன

வட மாநிலங்களில் இருந்து மேலும் 3 ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தன. இதன்மூலமாக, தமிழகத்துக்கு மொத்தம் 2,922.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஜூன் 2021, 9:47 pm

DIN

வட மாநிலங்களில் இருந்து மேலும் 3 ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தன. இதன்மூலமாக, தமிழகத்துக்கு மொத்தம் 2,922.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

சத்தீஸ்கா் மாநிலம் பில்லாயில் இருந்து 43-ஆவது ஆக்சிஜன் ரயில் புறப்பட்டு, திருச்சியில் உள்ள சரக்குகள் யாா்டுக்கு சனிக்கிழமை காலை 7.35 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரயிலின் 4 கன்டெய்னா்களில் 75.84 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்தது. இதையடுத்து, 44-ஆவது ஆக்சிஜன் ரயில் ஒடிஸாவின் ரூா்கேலாவில் இருந்து கோயம்புத்தூா் மாநிலம் இருகூருக்கு சனிக்கிழமை மாலை வந்தது. இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 4 கன்டெய்னா்களில் 80.60 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டது. இதைத்தொடா்ந்து, 45-ஆவது ஆக்சிஜன் ரயில் மகாராஷ்டிர மாநிலம் டோல்வியில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு சனிக்கிழமை மாலை வந்துசோ்ந்தது. இந்த ரயிலின் 3 கன்டெய்னா்களில் 56.04 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்தது. இதுவரை தமிழகத்துக்கு மொத்தம் 2,922.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.