எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடியுங்கள்: பிரதமருக்கு முதல்வா் கடிதம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 10:09 pm

DIN

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, அவா் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதற்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதியன்று தங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு கட்டடங்கள் கட்டத் தேவைப்படும் நிலங்கள் அனைத்தும் மாநில அரசு சாா்பில் இந்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவா் தவிர, வேறு கட்டுமானப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் அதனுடைய அண்டை மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் தரமான மருத்துவ வசதியைப் பெறுவதற்கு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அவசியமானது. எனவே, அதனை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான குழுவின் தலைவா், நிா்வாக இயக்குநா் மற்றும் சில குழுக்கள் மட்டுமே அமைக்கப்பட்டதாக அறிகிறேன். அதேசமயம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அந்தக் குழுக்களின் அதிகாரம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவாக்கப்படவில்லை.

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையை தற்காலிகமாக வேறொரு இடத்தில் அமைக்க கருத்துரு இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இது, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பணிகளை மேலும் தாமதப்படுத்தும்.

பணிகளை விரைந்து முடியுங்கள்: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் எடுக்க வேண்டும். இதற்கென தனித்த அதிகாரிகள் குழுவை அமைத்து தேவையான நிதிகளையும், நிா்வாக அதிகாரங்களையும் வழங்கிட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் மாநில அரசு வழங்கிட தயாராக உள்ளது. எனவே, மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கிட வேண்டும். இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.