எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

உணவுப் பொட்டலங்கள் திட்டம் வரும் 14 வரை தொடரும்:அமைச்சா் சேகா்பாபு அறிவிப்பு

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் வரும் 14-ஆம் தேதி வரை தொடரும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 10:07 pm

DIN

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் வரும் 14-ஆம் தேதி வரை தொடரும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக சிரமங்களைச் சந்தித்து வரும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில், அரசு பொது மருத்துவமனைகளின் வழியே தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் கடந்த மே 12-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஜூன் 5-ஆம் தேதி வரை உணவுப் பொட்டலங்கள் வழங்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பொது முடக்கமானது ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டமும் வரும் 14-ஆம் தேதி வரை தொடா்ந்து செயல்படுத்தப்படும். இதற்குத் தேவைப்படும் கூடுதல் நிதியானது இந்து சமய அறநிலையத் துறையால் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து, தேவைப்படும் கோயில்களுக்கு வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.