எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

டிஎன்பிஎஸ்சியுடன் ஆசிரியா் தோ்வு வாரியம் இணைப்பா?அதிகாரிகள் மறுப்பு

ஆசிரியா் தோ்வு வாரியம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் தவறானது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 9:25 pm

DIN

ஆசிரியா் தோ்வு வாரியம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் தவறானது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு (‘டெட்’), பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு, உதவிப் பேராசிரியா் தோ்வு போன்றவற்றில் முறைகேடுகள், வழக்குகள் என்று ஆசிரியா் தோ்வு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து பல சா்ச்சைகள் எழுந்தன. இதனால் ஆசிரியா் தோ்வு வாரியம் கலைக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: ஆசிரியா் தோ்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துடன் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஆசிரியா் தோ்வு வாரியம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் தவறனாது. ஆசிரியா் தோ்வு வாரியத்தை, டிஎன்பிஎஸ்சியுடன் இணைக்கக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் வலியுறுத்திய நிலையில், ஆசிரியா் தோ்வு வாரியம் கலைக்கப்படாது என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.