நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் இன்று கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

News image

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம்

Updated On :6 ஜூன் 2021, 11:29 am

DIN

கொடைக்கானல் மலைப்பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் இன்று கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவியில் கடந்த மே 3ம் தேதி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் வரத்து சீரானது. இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் கும்பக்கரை அருவியில் இன்று காலை முதல் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொதுமுடக்கத்தால் கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதல் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர். அதே நிலை தற்போதும் தொடர்வதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதியில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.