தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், கதை சொல்லிகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
இணைய வழியில் நடைபெற்ற சங்கத்தின் அமைப்பு மாநாட்டில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இணைய வழி சிறார் குழுக்கள், சிறார் செயற்பாட்டாளர்கள், பார்வையாளர்கள் என 250-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
சிறார் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் உதயசங்கர் சங்கத்தின் தலைவராகவும், சிறார் எழுத்தாளர், செயற்பாட்டாளர் விழியன் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளனர். சங்கத்தின் பொருளாளராக பஞ்சு மிட்டாய் இதழ் இணையதள ஆசிரியர், செயற்பாட்டாளர், எழுத்தாளர் பிரபு இருக்கிறார்.
மாநாட்டுக்குத் தலைமையேற்ற உதயசங்கர், சங்கத்தின் தேவையையும் படைப்பாளிகள் ஒன்றிணைவதன் அவசியத்தையும் விளக்கினார். பொதுச்செயலாளர் விழியன், குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிப்பதோடு, அவர்களை எழுதத் தூண்டும் செயல்களை சங்கம் முன்னெடுப்பது உள்ளிட்டவை பற்றி எடுத்துரைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


