ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோவை: 2-ம் தவணை நிவாரணம் வழங்கும் பணி; அமைச்சர் தொடங்கி வைத்தார்

கோவையில் கரோனா நிவாரணம் 2 ஆம் தவணை, 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் பணியினை உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

News image
2 ஆம் தவணை கரோனா நிவாரணம்: அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்
Updated On :15 ஜூன் 2021, 7:00 am

DIN

கோவை: கோவையில் கரோனா நிவாரணம் 2 ஆம் தவணை, 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் பணியினை உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் விதமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 ஆவது தவணையாக ரூ.2 ஆயிரம் பணம், 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு செவ்வாய்க்கிழமை முதல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை, வடவள்ளி கூத்தாண்டவர் கோயில் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆம் தவணை கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் பணியினை உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ராமதுரை முருகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஆர்.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.