ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மோடியுடன் வரும் 17-ல் ஸ்டாலின் சந்திப்பு உறுதியானது

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜூன் 17-ஆம் தேதி புது தில்லி சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார்.

News image
மோடியுடன் வரும் 17-ல் ஸ்டாலின் சந்திப்பு உறுதியானது
Updated On :15 ஜூன் 2021, 5:36 am

DIN

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜூன் 17-ஆம் தேதி புது தில்லி சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார். பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், இரு தலைவர்களின் சந்திப்பு இன்று உறுதியானது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் ஸ்டாலின் முதல் தில்லி பயணமாக இது அமையும்.

இதற்காக அவர் ஜூன் 16-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி செல்ல உள்ளார். 17-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்.

இந்த சந்திப்பின் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் தரப்பில், தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை அளிக்கப்பட உள்ளது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்குதுல், தமிழகத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், மத்திய அரசு சார்பில் வழங்க வேண்டிய பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகள், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மறுநாள் 18-ஆம் தேதி புது தில்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசவிருப்பதாக தில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்துக்கு அதிகளவில் கரோனா தடுப்பூசியை ஒதுக்குவது, செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு  அம்சங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.