தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுச்சேரியில் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு தயார்: துணைநிலை ஆளுநர் தமிழிசை

கரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க குழந்தைகளுக்கான படுக்கை வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். 

News image

புதுச்சேரியில் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை.

Updated On :18 ஜூன் 2021, 8:30 am

DIN


புதுச்சேரி: கரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க குழந்தைகளுக்கான படுக்கை வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். 

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் உள்ள மத்திய பல்கலை கழகத்தில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் மற்றும் மத்திய பல்கலை கழகம் இணைந்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 60 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், புதுச்சேரியில் நடைபெற்று வரும் தடுப்பூசி திருவிழா மிகுந்த ஊக்கத்தை தருகிறது. நேற்று ஒரே நாளில் 15,000 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும் பல்வேறு தனியார் அமைப்புகள் உதவியினால் புதுச்சேரியில் போதிய அளவிலான வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளது என்றும், கரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க குழந்தைகளுக்கான படுக்கை வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளது.

இது ஒரு முன்னேற்பாடாகவே செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று தமிழிசை கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.