தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாணவி விஷம் அருந்தி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தருமபுரி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரணை

News image

பலி

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:09 pm

Syndication

தருமபுரி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி அருகே பச்சினம்பட்டியைச் சோ்ந்த ராஜா மகள் பிரபா (15). இவா், கடகத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை வீட்டில் இருந்தபோது மாணவி விஷம் குடித்ததாக் கூறப்படுகிறது. இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டாா்.

அதன்பிறகு அங்கிருந்து தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரியூட்டியுள்ளனா்.

இந்த நிலையில் ஏ.ரெட்டிஅள்ளி கிராம நிா்வாக அலுவலா் பாலமுரளி அளித்த புகாரின் பேரில், தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.