அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்கு சிறப்பு மையங்கள்: ஸ்டாலின்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image
கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்கு சிறப்பு மையங்கள்: ஸ்டாலின்
Updated On :24 ஜூன் 2021, 12:38 pm

DIN


சென்னை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து, தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினாா். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை திமுக உறுப்பினா் உதயசூரியன் முன்மொழிந்தாா். ஆளும்கட்சி, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பல்வேறு உறுப்பினா்கள் தீா்மானத்தின் மீது பேசினா்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, புதன்கிழமை உரையாற்றினாா். அதற்கு முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் குறுக்கிட்டுப் பேசினா். இந்த நிலையில், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து உரையாற்றுகிறாா். அப்போது பல முக்கிய அறிவிப்புகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

YouTube video thumbnail

அதில், தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும். புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.

தமிழக்ததில் உள்ள பழமையான திருக்கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.

சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

தமிழகத்தின் மீத்தேன், நீயூட்ரினோ திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களின் போது எதிர்க்கட்சிகள் கூறிய கருத்துகள் மீது, முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பதில் அளித்து வருகிறார்.

அவரது உரைக்குப் பிறகு, ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். அதன்பின், பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீா்மானத்தை அவை முன்னவா் துரைமுருகன் முன்மொழிவாா். அந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டு, பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.