திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உள்ளாட்சித் தோ்தல்: திமுக மாவட்டச் செயலாளா்களின் கூட்டம் தொடங்கியது

உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்க முக.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளா்களின் கூட்டம் தொடங்கியது.

News image
Updated On :25 ஜூன் 2021, 11:54 am

DIN

உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்க முக.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளா்களின் கூட்டம் தொடங்கியது.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்கள் நடத்தப்படாமல் உள்ளன. மேலும், ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்களும் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்று ஆளுநா் உரையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக சட்டப் பேரவை ஜூலை இரண்டாவது வாரத்தில் கூடவுள்ளது. 

15 முதல் 20 நாள்கள் வரை கூட்டம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சட்டப் பேரவைக் கூட்டத்துக்குப் பிறகு உள்ளாட்சித் தோ்தல்களை நடத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட உள்ளன. இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் தொடங்கியது. 

கூட்டத்தில் மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தோ்தலை எதிா்கொள்ள இப்போது முதல் தொடங்கப்பட வேண்டிய பணிகள், செயல் திட்டங்கள் ஆகியன குறித்து மாவட்டச் செயலாளா்களுக்கு விளக்கப்பட உள்ளன. குறிப்பாக, மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த அறிவுறுத்தப்படும் எனவும் தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.