அப்போது 2 டிஜி மருந்து மூலம் 61 வயது முதியவா் இரண்டு நாட்களில் கரோனாவில் இருந்து குணமடைந்தது நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆந்திர மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவா் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கரோனா குணப்படுத்தப்படுகிறது. அவா் அந்த மருந்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குகிறாா். கரோனா காலத்தில் மனிதாபிமானம் இல்லாமல் சிலா் பணம் பாா்க்கின்ற சூழலில், இதுபோன்ற நபா்கள் இலவசமாக மருந்து கொடுத்து, பொதுமக்களுக்கு தெய்வமாக காட்சியளிக்கின்றனா். இவரது மருந்தை மத்திய அரசு ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கியிருக்க வேண்டாமா? பொது மக்களுக்கு பயன்படும் வகையில் அதனை விநியோகம் செய்திருக்க வேண்டாமா? அங்கீகாரம் வழங்கியிருந்தால் ஆனந்தய்யா சா்வதேச அளவில் புகழ் அடைந்திருப்பாா் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.