பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கம்பம் அருகே 6 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 நிதி உதவி

தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி  அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 நிதி உதவியை ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள்.

News image
கம்பம் அருகே 6 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 நிதி உதவி
Updated On :27 ஜூன் 2021, 10:45 am

DIN


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி  அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 நிதி உதவியை ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள்.

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக வீரமணி, பள்ளியில் முதுகலை ஆசிரியர் மாதவன்ராஜா, பட்டதாரி ஆசிரியர் ஷபி அகமது, ஆசிரியை ராதிகா ஆகியோர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஊரில் உள்ள பெற்றோர்களை சந்தித்து பேசினார். 

கரோனா பொதுமுடக்க காலத்தில் வாழ்வாதாரம் இழந்த அவர்கள் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பொருளாதாரம் குறைவால் தயங்கினார்கள்.

இதனால் இப்பள்ளியின் ஆசிரியர்கள் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்தனர், அதன்பேரில் ஆறாம் வகுப்பு சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ரூ.1000 நிதியை அவர்களது பெற்றோர்களிடம்  வழங்கினர்.

இதன் மூலம் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் எடுத்த நடவடிக்கையை பெற்றோர் ஆசிரியர் கழகம் பாராட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.