தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டாஸ்

​பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டாஸ்


பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சென்னை நந்தனத்தைச் சேர்ந்த தடகளப் பயிற்சியாளரான நாகராஜன் பயிற்சிக்கு வந்த இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாகப் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட நாகராஜன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி நாகராஜன் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com