அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மோடி என்ன சொல்கிறாரோ அதையே பழனிசாமி செய்கிறார்: ராகுல்

ஒரு கலாசாரம், ஒரு நாடு மற்றும் ஒரு வரலாறு என்ற கருத்தை முன்வைக்கும் சக்திகளை ஒதுக்கி வைப்பதில் தமிழகம் இந்தியாவுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

News image
மோடி என்ன சொல்கிறாரோ அதையே பழனிசாமி செய்கிறார்: ராகுல் பேச்சு
Updated On :1 மார்ச் 2021, 8:06 am

PTI


நாகர்கோயில்: ஒரு கலாசாரம், ஒரு நாடு மற்றும் ஒரு வரலாறு என்ற கருத்தை முன்வைக்கும் சக்திகளை ஒதுக்கி வைப்பதில் தமிழகம் இந்தியாவுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மோடி அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அவர் பேசுகையில், மொழி மற்றும் கலாசசாரத்திற்கு விரோதமான சக்திகளையும், "ஒரு கலாசாரம், ஒரு நாடு மற்றும் ஒரு வரலாறு" என்ற கருத்தை முன்வைக்கும் சக்திகளையும் ஒதுக்கி வைப்பதில் தமிழகம் நாட்டுக்கே முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், தமிழக மக்களின் பிரதிநிதியாக இருப்பவரே தமிழக முதல்வராக வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் மக்கள் நிரூபிக்க வேண்டும். ஆனால் மோடிக்கு அடிபணிந்து இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் ஒருபோதும் இதனைச் செய்ய முடியாது. ஒரு முதல்வர் என்றால் அவர் மக்களுக்காகவே இருக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் மோடியின் பிரதிநிதியாக இருக்கிறார். மோடி என்ன சொல்கிறாரோ அதையே இவர் செய்கிறார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி, தமிழ் மொழியையும் தமிழ் கலாசாரத்தையும் அவமதித்துள்ளனர் என்று கூறினார் ராகுல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.