மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!இன்னும் ரூ.2000 நோட்டு வைத்திருக்கிறீர்களா? என்ன செய்ய வேண்டும்?வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!
/

தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்: மத்திய இணை அமைச்சர் வி கே சிங்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்தார்.

News image

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக நிதி திரட்டும் ரத யாத்திரையை மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் வி. கே. சிங்.

Updated On :5 மார்ச் 2021, 12:39 pm IST

மதுரை:  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்தார்.

மதுரை ஐராவத நல்லூரில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பாக ராம ரத யாத்திரை தொடங்கி வைக்க வருகை தந்த மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே..சிங் செய்தியாளர்களிடம் கூறியது:

இன்று ஒரு முக்கியமான நாள். ராம ரத யாத்திரையை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். நாடு முழுவதும் ராமர் ரத யாத்திரைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரத யாத்திரை செல்லும் இடங்களில் சிறுவர்கள், பொதுமக்கள், தொழில் நடத்துபவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியை மனமுவந்து அளிக்கின்றனர்.

மேலும் ராமர் ஆலயம் கட்டப்படுவதை நாடு முழுவதும் உள்ள மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ராமர் ஆலயம் கட்டப்படுவதோடு ராம ராஜ்ஜியம் உருவாக்கப்படும். 

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கப்படும்.

தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது சுழற்சிமுறையில் ஏற்ற இறக்கங்களுக்கு உள்பட்டது. சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப விலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

கடந்த 2011 - 2014 ஆகிய ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை ரூ.1,240 ஆக இருந்தது. தற்போது ரூ.750 என்ற அளவில்தான் உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக பெட்ரோல் டீசல் விற்பனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படலாம் என்ற ஆலோசனையும் உள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.