நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்: மத்திய இணை அமைச்சர் வி கே சிங்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்தார்.

News image

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக நிதி திரட்டும் ரத யாத்திரையை மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் வி. கே. சிங்.

Updated On :5 மார்ச் 2021, 7:09 am

DIN

மதுரை:  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்தார்.

மதுரை ஐராவத நல்லூரில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பாக ராம ரத யாத்திரை தொடங்கி வைக்க வருகை தந்த மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே..சிங் செய்தியாளர்களிடம் கூறியது:

இன்று ஒரு முக்கியமான நாள். ராம ரத யாத்திரையை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். நாடு முழுவதும் ராமர் ரத யாத்திரைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரத யாத்திரை செல்லும் இடங்களில் சிறுவர்கள், பொதுமக்கள், தொழில் நடத்துபவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியை மனமுவந்து அளிக்கின்றனர்.

மேலும் ராமர் ஆலயம் கட்டப்படுவதை நாடு முழுவதும் உள்ள மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ராமர் ஆலயம் கட்டப்படுவதோடு ராம ராஜ்ஜியம் உருவாக்கப்படும். 

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கப்படும்.

தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது சுழற்சிமுறையில் ஏற்ற இறக்கங்களுக்கு உள்பட்டது. சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப விலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

கடந்த 2011 - 2014 ஆகிய ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை ரூ.1,240 ஆக இருந்தது. தற்போது ரூ.750 என்ற அளவில்தான் உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக பெட்ரோல் டீசல் விற்பனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படலாம் என்ற ஆலோசனையும் உள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.