எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்

​ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :7 மார்ச் 2021, 12:35 pm


ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நாட்டின் பிற மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு மீண்டும் இ-பாஸ் நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது.

ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகியவை தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்து பிற மாநிலங்கள் வழியாக தமிழகம் வருவோரும் இ-பாஸ் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியான பயணமாக 3 நாள்களுக்கும் குறைவாக தமிழகம் வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.