சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று (மார்ச் 7) காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தேர்தல் பணிகள் தொடர்பாகவும், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் குறித்தும் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
மேலும்,சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் சிறிய கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.