டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருப்பூரில் சாலை விபத்து: 2 தொழிலாளிகள் பலி

திருப்பூர் மங்கலம் சாலையில் லாரி - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளிகள் 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

News image
திருப்பூர் சாலை விபத்தில் 2 தொழிலாளிகள் பலி
Updated On :27 ஜனவரி 2024, 7:41 pm

DIN

திருப்பூர் மங்கலம் சாலையில் லாரி - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளிகள் 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி (45), அய்யன் நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி(35), இந்த இருவரும் திருப்பூரில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், வேலுசாமியின் இருசக்கர வாகனத்தில் இருவரும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் திங்கள்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தனர். 

Story image

இவர்களது இருசக்கர வாகனம் தாடிக்கார முக்கு அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த கான்கிரீட் கலவை ஏற்றிச் செல்லும் லாரியை முந்த முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி வேலுசாமி, கருணாநிதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் மத்திய காவல் துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
லாரியை ஓட்டி வந்த திருச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக மங்கலம் சாலையில் சில நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.