திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கும்மிடிப்பூண்டிக்கு வந்திறங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத்திற்கு உள்பட 405 வாக்குச் சாவடிகளில் தேர்தலன்று வாக்களிக்கத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தது.

News image

கும்மிடிப்பூண்டிக்கு வந்திறங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :8 மார்ச் 2021, 11:36 am

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி கும்மிடிப்பூண்டி சட்டமன்றத்திற்கு உள்பட 405 வாக்குச் சாவடிகளில் தேர்தலன்று வாக்களிக்கத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தது.

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் 405 வாக்குச்சாவடிகளில் தேர்தலன்று வாக்களிக்கப் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் 3 லாரிகளில் வந்தது.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆட்சியர் பாலகுரு தலைமையில் உதவி தேர்தல் அலுவலர்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் குமார், கும்மிடிப்பூண்டி தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுத் தனி அறையில் வைக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுரு அந்த அறைக்கு அதிமுக நகரச் செயலாளர் மு.க.சேகர், திமுக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் மணிபாலன், பாஜக நகர நிர்வாகி வேந்தன் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சீல் வைத்தார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை சுழற்சி முறையில் 24 மணி நேரம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் 405 வாக்குச்சாவடி மையங்களில் 486 பேலட் யூனிட்டுகள், 486 கன்ட்ரோல் யூனிட்டுகள், 507 விவிபிஏடி இயந்திரம்  வந்துள்ளதாக நிகழ்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆட்சியர் பாலகுரு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.