கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நெல்லை வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

News image

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்குஎண்ணும் மையத்தை ஆய்வு செய்தார் ஆட்சியர் வே.விஷ்ணு.

Updated On :8 மார்ச் 2021, 11:19 am

DIN

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. மொத்தம் 1924 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 தொகுதிகளுக்குமான வாக்குஎண்ணும் மையமாக திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. 

இம்மையத்தை திருநெல்வேலி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார். ஒவ்வொரு தொகுதியின் வாக்குகள் எண்ணும் வளாகம், கட்டடத்தில் உள்ள வழிப்பாதை விவரங்கள், அலுவலர்கள் மற்றும் கட்சி முகவர்கள் அமர தேவையான இடவசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். வாக்குஎண்ணும் மையத்தில் உள்ள கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளைக் கூடுதலாகச் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், மாநகர காவல் ஆணையர் அன்பு, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சார் ஆட்சியர்கள் பிரதீக்தயாள், சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்குஎண்ணும் மையத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்தார் ஆட்சியர் வே.விஷ்ணு. உடன், மாநகர காவல் ஆணையர் அன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உள்ளிட்டோர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.