நீலகிரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டத்தில் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


நீலகிரி மாவட்டத்தில் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான ஊட்டி மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய பல இடங்கள் உள்ளன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ரூ.200 அபராதமும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கரோனா தொற்று, மெல்ல படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...