அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன். 8.8.1949ல் பிறந்த இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு ஆதிலட்சுமி எனும் மனைவியும், நாராயணன், ரமேஷ் ஆகிய இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
சொந்தமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், தற்போது விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக திமுகவில் பதவியில் உள்ளார். இதுவரை மொத்தம் 10 சட்டப்பேரவைத் தேர்தல்களைச் சந்தித்துள்ள இவர், அவற்றில் 8 ல் வெற்றியும் 2ல் மட்டுமே தோல்வியும் கண்ட வெற்றியாளர். ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்த இவர், பின்னர் திமுகவில் இணைந்தார். திமுக ஆட்சியில் மூன்றுமுறை அமைச்சராக இருந்துள்ள இவர் கடந்த 2016 தேர்தலில் வெற்றிகண்டு எம்.எல்.ஏ.வாக உள்ளார்.