புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ஜி.கே.வாசன்

கரோனா தடுப்பூசியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று செலுத்திக் கொண்டாா்.

News image
Updated On :13 மார்ச் 2021, 1:54 pm

DIN

கரோனா தடுப்பூசியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று செலுத்திக் கொண்டாா்.
கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. 
அதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் கரோனா முன்களப் பணியாளா்களான சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜன. 16-ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதன் பின்னர், பொதுமக்களில் 60 வயதுக்கு மேற்பட்டோா், 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. 
அதன்படி, நாட்டில் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 250 கட்டணம் செலுத்தியும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள வி.எஸ் மருத்துவமனையில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கரோனா தடுப்பூசி இன்று செலுத்திக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.