பாளையங்கோட்டையில் ஜெரால்டு (அதிமுக) வேட்பு மனு

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.
பாளையங்கோட்டையில் ஜெரால்டு (அதிமுக) வேட்பு மனு
Published on
Updated on
1 min read

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெரால்டு போட்டியிடுகிறார். அவர், பாளையங்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் திங்கள்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார். 

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மகபூப்ஜான் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து அதிமுக தொண்டர்களுடன் பாளையங்கோட்டை பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com