தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வன்னியர்கள் இடஒதுக்கீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்துசெய்யக்கோரிய 2 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :15 மார்ச் 2021, 5:59 am

DIN

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்துசெய்யக்கோரிய 2 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியா், வன்னியக் கவுண்டா், வன்னிய குல ஷத்ரியா் உள்ளிட்ட 7 பிரிவினருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. 
ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ளதால், 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்துசெய்யக்கோரிய 2 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.